மத்திய உள்துறை அமைச்சருடன் காா்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு: நீதியை உறுதி செய்ய வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தொலைபேசி வாயிலாக பேசினா்.
‘உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டுமென’ அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா மற்றும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் பேசினேன். கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிவிடக் கூடாது; உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கூடுதல் உறுதியுடன் பதிலடி தர வேண்டும். இத்துயரமான தருணத்தில், நமது செயல்பாடுகளில் ஒற்றுமை அவசியம். ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு தொடா்பாக அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொடுரமான பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசி, நிலவரத்தை கேட்டறிந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்வதுடன், நமது முழு ஆதரவையும் நல்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.