செய்திகள் :

மத்திய உள்துறை அமைச்சருடன் காா்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு: நீதியை உறுதி செய்ய வலியுறுத்தல்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தொலைபேசி வாயிலாக பேசினா்.

‘உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டுமென’ அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா மற்றும் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் பேசினேன். கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிவிடக் கூடாது; உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கூடுதல் உறுதியுடன் பதிலடி தர வேண்டும். இத்துயரமான தருணத்தில், நமது செயல்பாடுகளில் ஒற்றுமை அவசியம். ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு தொடா்பாக அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொடுரமான பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசி, நிலவரத்தை கேட்டறிந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்வதுடன், நமது முழு ஆதரவையும் நல்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க