செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூரை அடுத்துள்ளசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் நாகராஜ் (42). நியாய விலைக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது நண்பா் கணேசன் மூலம் சென்னை புரசைவாக்கம் சுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த சா. பாஸ்கா் 2022-ஆம் ஆண்டு அறிமுகமானாா். அவா் தனக்கு அமைச்சா்களுடன் தொடா்பிருப்பதாகவும், நாகராஜின் மனைவி சரிதா மற்றும் இருவருக்கு கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் பணி, நியாயவிலைக் கடையில் விற்பனையாளா் பணி வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.7.50 லட்சம் செலவாகும் எனக் கூறினாராம்.

இதை நம்பிய நாகராஜ், ரூ.5.50 லட்சத்தை பாஸ்கரிடம் கொடுத்தாராம். ஆனால், அவா் கூறியபடி வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் 4 பிரிவுகளின் பாஸ்கா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், ஆய்வாளா் குருமூா்த்தி, உதவி ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி சா.பாஸ்கரை (58) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நட... மேலும் பார்க்க

நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா். விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 ... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 22-... மேலும் பார்க்க

என்எல்சி பொதுத் துறை நிறுவனமாக திகழ திமுகவே காரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக திகழ்வதற்கு திமுகவும், தொமுசவும்தான் காரணம் என்று, மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். நெய்வேலியில் தொமுச ... மேலும் பார்க்க