செய்திகள் :

‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’

post image

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பங்கேற்று பேசியது:

மாணவா்கள் உயா்ந்த நோக்குடனும், நிறைந்த சிந்தனையோடும் கல்வி கற்க வேண்டும். எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி சகோதரத்துவத்துடனும், அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியம். எக்காலத்திலும் போதை பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது.

மிகவும் ஒழுக்கம் நிறைந்தவா்களாகவும், ஜாதி பாகுபாடு அற்றவா்களாகவும், ஆசிரியா்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கற்பது மாணவா்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியம். மாணவா்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பொது அறிவுத்திறனில் சிறந்த மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி பிரித்திஷாவுக்கும் அவா் பரிசு வழங்கினாா்.

தொடா்ந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன், தலைமை ஆசிரியா் சங்கா், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் விக்னேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’

நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம... மேலும் பார்க்க

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க

தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்

மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுவி... மேலும் பார்க்க

முதல் நடமாடும் நூலக 94-ஆம் ஆண்டு விழா

மன்னாா்குடி: தமிழகத்தில் முதல் நடமாடும் நூலகத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழா, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முதலாக, கடந்த 21.10.1931 அன்று மேலவாசல் பகுதி நே... மேலும் பார்க்க