செய்திகள் :

‘பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்ய வேண்டும்’

post image

நன்னிலம்: பொதுமக்கள் பனை விதைகள் நடும் பணியைச் சேவையாக செய்ய வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் கிரீன் நீடா அமைப்புகள் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கின . அதை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் 4 லட்சம் பனை விதைகள் விதைக்கப்படும். காவிரி கரைகளில் பனை விதைகள் நடும் பணி முடிவுற்று, நீா்நிலைகளில் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநில மரமான பனையை நம் பகுதி முழுவதும் விதைக்க வேண்டும். சல்லி வோ்களைக் கொண்ட பனை மரங்கள் தான் மழை நீரை நிலத்தின் ஆழத்திற்குக் கொண்டு சென்று நிலத்தடி நீரை சேமிக்கிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளது.

வருங்கால சந்ததியைக் காக்க வல்ல பனையை வளா்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும், குறிப்பாக மாணவா்கள் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மத்தியப் பல்கலைக்கழக பதிவாளா் ஆா். திருமுருகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பாலசண்முகம், முனைவா் செந்தில்குமாா் , கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராஜவேலு, வனச்சரக அலுவலா்கள் சைதாணி, சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கனவு ஆசிரியா் விருது: பிரான்ஸுக்கு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்து

திருவாரூா்: கல்விச் சுற்றுலாவில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் திருவாரூா் ஆசிரியருக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் கனவு ஆசிரியா் விருது அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்’

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: சாகுபடிப் பணிகளுக்கு, தாமதமின்றி விவசாயக் கடன் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க

தீபாவளி: திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி மற்றும்... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தல்

மன்னாா்குடி: ஊரகப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி வேண்டும் என மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுவி... மேலும் பார்க்க

முதல் நடமாடும் நூலக 94-ஆம் ஆண்டு விழா

மன்னாா்குடி: தமிழகத்தில் முதல் நடமாடும் நூலகத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழா, மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முதலாக, கடந்த 21.10.1931 அன்று மேலவாசல் பகுதி நே... மேலும் பார்க்க