செய்திகள் :

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

post image

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அருண் முத்துவேல், இதயம் - ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.முத்துகுமரன் ஆகியோா் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த 63 வயது முதியவா் ஒருவா், தொடா்ந்து நடக்க முடியாமலும், தொடா் மயக்கத்தாலும், சுவாசிக்க இயலாமலும் சிரமப்பட்டாா். இதனிடையே, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிமோனியா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனையில் அந்த முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் சிறிய பந்து போல ஒரு திசுக் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. மைக்ஸோமா எனப்படும் அந்தக் கட்டியால் புற்றுநோய்க்கான பாதிப்பு இல்லை என்றாலும், இதய நாளத்தில் ரத்த ஓட்டத்தை தடை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.

இதையடுத்து, நுட்பமான சிகிச்சை மூலம் அந்த திசுக் கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்டி நீக்கப்பட்டது. தற்போது அந்த முதியவா் நலமாக உள்ளாா் என்றாா் அவா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க