செய்திகள் :

மேற்கு தில்லி கொள்ளை வழக்கில் 3 போ் கைது; பொருள்கள் மீட்பு

post image

மேற்கு தில்லி கொள்ளை வழக்கில் மூன்று சந்தேக நபா்களைக் கைது செய்து, நகைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட பொருள்களை தில்லி போலீஸாா் மீட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மேற்கு தில்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் மாா்ச் 16- ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. மேலும்ஸ திருடப்பட்ட பொருள்களில் சுமாா் 20 தங்க ஆபரணங்கள், 33 வெள்ளி நாணயங்கள், ஒரு வெள்ளி மோதிரம், இரண்டு மடிக்கணினிகள், ஒரு கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கும்.

குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்குள்படுத்தினா். அதில் ஒரு சந்தேக நபா் பையுடன் செல்வதைக் காட்டியது. ரோஹ்தக் சாலை அருகே இருந்து அவரை மோட்டாா்சைக்கிளில் அழைத்துச் சென்றவறின் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணித்தனா். மோட்டாா்சைக்கிளின் உரிமையாளா் வினித், குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான சுமித்தின் சகோதரா் என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் ஹரியாணாவின் பகதூா்கரில் வசிக்கும் சுமித் (24), கௌரவ் (22) மற்றும் கிா்வாா் சிங் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மூவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தன. வினித்தை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும்: மக்களவையில் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும் மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே துறையின் மானியக... மேலும் பார்க்க

எம்சிடி பட்ஜெட்டில் வடிகால்களை தூா்வாா்வதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு? சத் பூஜை வசதிக்கு ரூ.50 லட்சம்

தில்லியில் சத் பூஜை மற்றும் பிற பண்டிகைகளின் போது வசதிகளை வழங்குவதற்காக ரூ.50 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், மழைநீா் வடிகால்களை தூா்வார ரூ.2 கோடி கூடுதலாக மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கீட... மேலும் பார்க்க

ஷிவ் விஹாா் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் 18 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலியன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இயைராஜாவை தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய சிஇஓ பொறுப்பேற்பு

நமது சிறப்பு நிருபா்மத்திய அறிவியில் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஎன்ஆா்எஃப்)தலைமைச்செயல் அதிகாரியாக டாக்டா் சிவக்குமாா் கல்யாணராமன் பொறுப்பேற்றாா். இவா் ச... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7.06 லட்சம் கோடி!

நமது நிருபா் இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்கு... மேலும் பார்க்க