செய்திகள் :

ஷிவ் விஹாா் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

post image

வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் 18 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது தனிப்பட்ட விரோதம் அல்லது வாக்குவாதத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் காரவால் நகா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஷிவ் விஹாரில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழு, அங்கு கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இளைஞரைக் கண்டது. உடனடியாக பிசிஆா் பிரிவு அவரை ஜிடிபி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

குற்றம் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றன. குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஸ்கேன் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும்: மக்களவையில் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும் மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே துறையின் மானியக... மேலும் பார்க்க

எம்சிடி பட்ஜெட்டில் வடிகால்களை தூா்வாா்வதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு? சத் பூஜை வசதிக்கு ரூ.50 லட்சம்

தில்லியில் சத் பூஜை மற்றும் பிற பண்டிகைகளின் போது வசதிகளை வழங்குவதற்காக ரூ.50 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், மழைநீா் வடிகால்களை தூா்வார ரூ.2 கோடி கூடுதலாக மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கீட... மேலும் பார்க்க

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலியன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இயைராஜாவை தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய சிஇஓ பொறுப்பேற்பு

நமது சிறப்பு நிருபா்மத்திய அறிவியில் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஎன்ஆா்எஃப்)தலைமைச்செயல் அதிகாரியாக டாக்டா் சிவக்குமாா் கல்யாணராமன் பொறுப்பேற்றாா். இவா் ச... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7.06 லட்சம் கோடி!

நமது நிருபா் இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்கு... மேலும் பார்க்க

தமிழகம் தழுவிய கம்ப ராமாயண விழா ஸ்ரீரங்கத்தில் தொடக்கம்: மத்திய அமைச்சா் பங்கேற்பு

முதன் முறையாக தமிழகத்தில் ’கம்ப ராமாயணம்’ குறித்து மாநிலம் தழுவிய விழாக்களும் கருத்தாக்கங்களும் மத்திய அரசின் சாா்பில் நடத்தப்படுகிறது. ’கம்ப ராமாயணத்தை’ புதுப்பித்து நிலைபெறச் செய்யும் முயற்சிக்கான இ... மேலும் பார்க்க