செய்திகள் :

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: பொழுதுபோக்குப் பூங்காவைத் திறக்க தற்காலிகத் தடை!

post image

சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சச ராட்டினம் பழுதாகி அதில் மக்கள் சிக்கித் தவித்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் கேளிக்கை பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது, இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்,

இந்தநிலையில் நேற்று இரவு 7மணியளவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சச ராட்டினத்தில் 35 நபர்கள் ஏறி அமர்ந்து சுற்றியுள்ளனர். அப்போது ராட்டினம் பழுதாகி செங்குத்தாக சுமார் 150 அடியில் நின்றது. இதனால் அதில் இருந்த 35 நபர்களும் கீழே இறங்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர்.

பூங்கா நிர்வாகத்தினர் ராட்சச ராட்டினத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராட்சச மின்தூக்கிகள் மூலம் சென்று 35 பேரையும் பத்திரமாக மீட்டனர்,

மேலும் அங்கிருந்த மக்களும், ராட்சசராட்டினம் பழுதாகி நின்றவுடன் பூங்கா நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோர்வாக இருந்த சிலருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேளிக்கை பொழுதுபோக்கு பூங்காவில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டு பூங்கா நிர்வாக மேலாளருக்கு நீலாங்கரை போலீசார் நோட்டீஸ் ஒன்றை வழங்கி உள்ளனர். மேலும் ராட்சச ராட்டினம் பழுதாகிய காரணம் குறித்தும், பூங்காவில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா, பூங்கா முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் விளக்கம் கேட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் வரை பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் முறைகேடுகள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க