செய்திகள் :

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர்ந்து உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இதனிடையே, ”நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.

அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(மே 29) செய்தியாளர்களைச் சந்தித்து, ”அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை, ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு தான். தவறு செய்தது அவர் அல்ல, நான்தான்” என்று அவர் பேசினார்.

இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை( மே 30) முதல் மூன்று நாள்களுக்கு கட்சி நிர்வாகிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. மாவட்டந்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாளை முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

அன்புமணியின் அடுத்த நகர்வு குறித்து 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்திற்கு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை அன்புமணி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நேபாளத்தில் 18வது குடியரசு நாள்: மன்னராட்சி ஆதரவாளர்கள் பேரணி!

பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ப... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் (மே 30, 31) எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(மே 30) மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் நடத்தும் பாஜக அரசு! பொதுக்குழுவுக்கு ஸ்டாலின் அழைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கட்ச... மேலும் பார்க்க

கட்சியைக் கைப்பற்றுகிறாரா அன்புமணி? பெரும்பாலான மாவட்ட செயலர்கள் வருகை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அழைப்பை ஏற்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ... மேலும் பார்க்க

திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன: முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்பி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். வருகிற ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடை... மேலும் பார்க்க

பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு! கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு!

பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கட்டண உயர்வுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பேருந்துகளுக்கான கட... மேலும் பார்க்க