செய்திகள் :

வண்டிப்பெரியாறு: அச்சுறுத்திய புலி மீது துப்பாக்கிச்சூடு; வனத்துறை மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்!

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதில் கரடி, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருவதும் வழக்கமாகும்.

புலி

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசித்துவரும் வண்டிப்பெரியார் அருகேயுள்ள க்ராம்பி என்ற இடத்தில் கடந்த ஒரு வார காலமாகவே புலி ஒன்று நடமாடி வருவதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதுமட்டுமன்றி வீடுகளில் உள்ள கால்நடைகளையும் வேட்டையாடி வந்தது.

இதனிடையே வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வந்த நிலையில், கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்ச்சித்தனர். ஆனால் புலி வைக்கப்பட்ட கூண்டில் சிக்கவில்லை. தொடந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

வனத்துறை

அப்பொழுது புலி தேயிலை தோட்டத்தில் பதுங்கிவாறு வனத்துறையினரை தாக்கியது. வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் புலி உயிரிழந்தது. இதற்கிடையே வனத்துறையினர் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டதே புலி இறப்பதற்க்கு காரணம் என விலங்குகள் நல ஆர்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``வண்டிப்பெரியாறு பகுதியில் உயிரிழந்த ஆண் புலிக்கு 8 வயது ஆகிறது. இந்த புலி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆடுகளையும், நாய்களையும் வேட்டையாடி வந்தது. வனத்துறையினரால் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருந்தது. அந்தப் புலி கம்பீரமாக இருந்தாலும் கூட மிகவும் சோர்வாக காணப்பட்டது. அதன் காலில் காயம் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

வனத்துறை

புலி நடமாட்டம் இருந்ததால் க்ராம்பி பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தோம். சுமார் 20 அடி தூரத்தில் இருந்த புலிக்கு மயக்கமருந்து ஊசி செலுத்த முற்பட்டபோது வனக்காவலர் ஒருவரை புலி தாக்கியது. அதிலிருந்து தப்பிக்கவே தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் - முதலிடம் பிடித்த கோம்பை!

தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவ... மேலும் பார்க்க

சிறுத்தை, புலியுடன் நேரில் சண்டையிட்டு தப்பிப் பிழைத்த இருவர்... மருத்துவமனையில் சிகிச்சை

வனப்பகுதிக்கு அருகில் வசித்தால் சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்துடன், குடியிருப்பு பகுதிக்குள் வந்து நாய், ஆடு, மாடுகளை இழுத்துச் செல்வதும் வழக்கம். மகாராஷ்ட... மேலும் பார்க்க

``காட்டுமாட்டை மீட்க இரக்கமின்றி பேரம் பேசினார்கள்..." - வனத்துறையை சாடும் மக்கள்; என்ன நடந்தது?

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி வனக்கோட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டு மாடுகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரிதவித்து வருகின்றன. அதிலும் குற... மேலும் பார்க்க

இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந... மேலும் பார்க்க

குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்... மேலும் பார்க்க