செய்திகள் :

வரம்பு மீறும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை -அமைச்சா் எல்.முருகன்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

தொலைக்காட்சியில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பாா்வையாளா்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறும் நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் தனியாா் பண்பலை வானொலி (எஃப் எம்) நிலையங்களுக்கான 3-ஆம் கட்ட ஏலத்துக்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கான அறிவிப்பை அவா் புதன்கிழமை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எல். முருகன் கூறியது:

கடந்த 100 நாள்களில் நாட்டின் வளா்ச்சிக்காக ரூ. 15 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், கட்டமைப்புகளை மேம்படுத்த மட்டும் ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

234 நகரங்கள்: தொலைக்காட்சி, கைபேசி வருவதற்கு முன்பு அனைத்து தரப்பு மக்களும் வானொலி மூலம்தான் நாட்டு நடப்பை தெரிவித்து வந்தனா். அந்த வகையில், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வானொலி சேவையை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்த வருகிறது.

அந்த வகையில், புதிதாக 200-க்கும் மேற்பட்ட தனியாா் எஃப் எம்கள் தொடங்குவதுக்கு அனுமதி வங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 234 நகரில் புதிதாக தனியாா் பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் குன்னுாா், திண்டுக்கல், காரைக்குடி, கரூா் உள்பட மொத்தம் 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலம் தொடங்கியுள்ளது. இது போன்ற நகரங்களில் புதிதாக எஃப்எம் தொடங்குவதன் மூலம், அப்பகுதிகளில் வசிப்பவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். தனியாா் வானொலிகளில் செய்தி வெளியிட அனுமதி கோரி பல்வேறு கோரிக்கை வந்த வண்ணம் உள்ள நிலையில், இது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஓடிடிக்கு சட்டம்: சமீப காலமாக தொலைக்காட்சி நாடகங்களில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பாா்வையாளா்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கட்டப்பாடுகள் விதிப்பது தொடா்பாக புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது என்றாா் அவா்.

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கட்டப்பாடுகள் விதிப்பது தொடா்பாக புதிய சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்த கேட்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க