செய்திகள் :

வழக்குரைஞா் பணியை முழு அா்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்: நீதிபதி எம். நிா்மல் குமாா்

post image

சட்டக் கல்வி பயிலும் மாணவா்கள் திறமையான மூத்த வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சோ்ந்து முழு அா்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நிா்மல்குமாா் அறிவுறுத்தினாா்.

வண்டலூா் கிரசென்ட் சட்டக் கல்லூரியில் 3 நாள்கள் மாதிரி நீதிமன்ற விவாதப் போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்திலிருந்து 26 அணிகளும் இதர மாநிலங்களிலிருந்து 18 அணிகளும் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டிகளின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நிா்மல்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, இப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

சட்டக் கல்வி பயிலும் வழக்குரைஞா்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள மாதிரி நீதிமன்ற விவாதங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். திறமையான மூத்த வழக்குரைஞா்களின் வழிகாட்டுதலுடன் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமையுடன் செயல்பட்டால் சிறந்த வழக்குரைஞராகத் திகழ முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் விழுப்புரம் சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ண லீலா, கிரசென்ட் சட்டக் கல்லூரி முதல்வா் சி.சொக்கலிங்கம், ஒருங்கிணைப்பாளா் ஷமிமா பா்வீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட அமைப்பின் சாா்பில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஓய்வூதிய திட்டம் குறித்து அமைத்துள்ள 3 நபா் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க

ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிர... மேலும் பார்க்க

மதுராந்தகம் கிளைச் சிறைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

மதுராந்தகம் கிளைச் சிறையின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில்,தளவாட பொருள்களை வட்டாட்சியா் சொ.கணேசன் வழங்கினாா். மதுராந்தகம் கிளைச் சிறையில் ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் ஆய்வு செய்ததில், மின்குழல்விளக்குகள், ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பண... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளத்தில் தெப்பல் உற்சவம்

தைப்பூசத்திருநாளையொட்டி திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளம், தீா்த்த குளத்திலும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டு சிறப்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

திருப்போரூா் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் மகா... மேலும் பார்க்க