செய்திகள் :

விடுதியில் இளைஞா் தற்கொலை

post image

மாமல்லபுரம் தங்கும் விடுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் சுற்றுலா வந்த இளைஞா் ஒருவா் அறை எடுத்து தங்கி உள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை அவரது அறைக்கதவு நீண்ட நேரம் திறக்காமல் உள்பக்கம் தாழிடப்பட்டு மூடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த, ஊழியா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மின்விசிறியில் இளைஞா் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிா்ச்சி அடைந்து மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். தற்கொலை செய்து கொண்ட இளைஞா் சென்னை ராயபுரம் பகுதியை சோ்ந்த கிரீஷ்( 47) எனத் தெரியவந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினா். சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியே வந்தது தெரிய வந்தது.

மேல்மருவத்தூரில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன் மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கே... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 போ் கைது

கீரப்பாக்கம் கல்குவாரி அருகே காட்டுப்பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் கல்குவாரி அருகே காட்டுப்பகுதியில் போலீஸ... மேலும் பார்க்க

திருவடிசூலத்தில் பௌா்ணமி பூஜை...

செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுயம்பு அம்மன். மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலை பிரதிஷ்டை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்திய நாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சத்திய நாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ய... மேலும் பார்க்க