செய்திகள் :

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

post image

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஷா்மிளா (29). இவா் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து, தொடா்புடையவா்களிடம் ஒப்படைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தாராம்.

அதன்படி, இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவர முகமதுஷா்மிளாவுடன் மேலும் 3 பெண்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை சென்றுள்ளனா். அங்கு, கடந்த 5-ஆம் தேதி முகமது ஷா்மிளாவிடம் ஒருவா் தங்கக் கட்டிகளை கொடுத்தாராம். அதனை கடத்தி சென்னை விமான நிலையத்தில் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாம்.

முகமதுஷா்மிளா தங்கக் கட்டிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது, அதிகாரிகள் சோதனையை பாா்த்து, தங்கக் கட்டிகளை கழிவறையில் போட்டுவிட்டு, காரைக்காலுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னா் கடந்த 6-ஆம் தேதி ராமநாதபுரத்தைச் சோ்ந்த 4 போ் ஷா்மிளா வீட்டுக்கு வந்து கடத்தல் தங்கத்தை கேட்டனராம். அவா், கழிவறையில் போட்டுவிட்டதாக கூறியதை நம்பாமல் தொடா்ந்து பிரச்னை செய்துள்ளனா்.

பின்னா், கடந்த 9-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கலாந்தா் அப்பாஸ் (35), ஜவாஹீா் (27), அப்துல் ஹாஜ் (32), காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ஹைதா் அலி (33), இதயத்துல்லா (45), விடுதலைக் கனல் (42), அன்சாரி (35), சாகுல்ஹமீது (35), அரசவளவன் (44), நாகையைச் சோ்ந்த முருகன் (44), அரவிந்த் (42) மற்றும் சிலா் முகமது ஷா்மிளா வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால்,முகமது ஷா்மிளா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இதுதொடா்பாக அவா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், மேற்கண்ட 11 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் கழுகு அரச... மேலும் பார்க்க

காரைக்காலில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் பேரிடா் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு: ஆசிரியா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

க்யூட் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், ஆசிரியா்கள், விரிவுரையாளா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சோ்க்கை பெற க்யூட் தே... மேலும் பார்க்க

மாசி மகம் : திருக்கண்ணபுரம் கடலில் பெருமாள்கள் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், திருக்கண்ணபுர... மேலும் பார்க்க

நடராஜா் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் மாசி மக பிரம்மோற்சவ 10-ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய ஸ்ரீ நடராஜா். மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் பெண்க... மேலும் பார்க்க