செய்திகள் :

'வெளியூரில் இருக்கிறார்!' - மகள்களோடு சேர்ந்து கணவரை கொன்று புதைத்து, 50 நாள்களாக நாடகமாடிய மனைவி!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது: 53). பழனிவேலுக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். இதில், அவர்களது மகள் தமிழ்ச்செல்வி என்பவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தந்தை பழனிவேல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பழனிவேலு பல ஆண்டுகளாகவே உடலில் கலழை கட்டி நோய் இருந்து அதற்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

palanivelu

மேலும், வயதானதால் பழனிவேலுக்கு நோய் அதிகமாகவே பழனிவேலு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பழனிவேலு இன்னும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே சில நாட்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால், கணவரை முறையாக பராமரிக்க முடியாமலும், மற்றொரு பக்கம் பழனிவேலு வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும் அவரது மனைவியும், மகள்களும் அல்லல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அவரது மனைவி மகாலட்சுமி, பழனிவேலுவை மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா உள்ளிட்டோர் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்து, தங்கள் வீட்டின் முன்பாக கடந்த 50 நாட்களுக்கு முன் புதைத்துள்ளனர். யாருக்கும் தெரியாததால் சந்தேகம் வராதபடி அனைவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி அன்று ஊர் மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், 'எங்கே உங்கள் அப்பா?' என்று பழனிவேலு மகள்களிடம் கேட்டபோது, 'அவரை பராமரிக்க முடியாததால் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளோம். கோவையில் சிகிச்சையில் இருக்கிறார்' என்றும் கூறி மழுப்பி வந்துள்ளனர்.

makalatchumi

இப்படி, ஒரு பக்கம் ஊர் மக்களுக்கு சந்தேகம் வரவே யாரும் இதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மகாலட்சுமியின் மூத்த மகள் தமிழ்ச்செல்வி, 'அப்பா உடல் நலம் சரியில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரை நாங்களே வீட்டின் முன்பாக அடக்கம் செய்து விட்டோம்' என்று கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த பழனிவேலுவின் சகோதரி, 'திடீரென நீங்களாக எப்படி எல்லாவற்றையும் செய்ய முடியும்?. நீங்கள் தான் பழனிவேலுவை ஏதோ செய்து விட்டீர்கள்' என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, மகாலட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால், சந்தேகமடைந்த பழனிவேலுவின் சகோதரி கஸ்தூரி, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மகாலட்சுமி மற்றும் அவரது மகள்களான தமிழ்ச்செல்வி, சாரதா ஆகிய மூவரையும் கைது செய்த நமண சமுத்திரம் காவல்நிலைய போலீஸார், அவர்களது வீட்டின் முன்பாக புதைக்கப்பட்டிருந்த பழனிவேலு சடலத்தை தோண்டி எடுத்தனர்.

instant spot

மேலும், மூன்று பேரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அங்கு வைத்து பழனிவேலு உடலை உடற்கூராய்வு செய்தனர். கணவரை மனைவியே தனது மகள்கள் இருவரோடு சேர்ந்து கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: கழிவறை ஜன்னலை உடைத்து கடத்தல் நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்; 17 குழந்தைகள் பத்திரமாக மீட்பு!

மும்பை பவாய் பகுதியில் உள்ள பி.ஆர்.ஸ்டூடியோவில் வெப் சீரிஸ் ஒத்திகைக்காக மும்பை, நவிமும்பை, கோலாப்பூர், சாங்கிலி, சதாரா போன்ற இடங்களில் இருந்து 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அக்குழந்தைகளுக... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு; குவாரி உரிமையாளர்கள் மீது குண்டாஸ்; ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

விதிமீறல் குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி ச... மேலும் பார்க்க

வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. கோவைலோகேந... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். ... மேலும் பார்க்க

கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இ... மேலும் பார்க்க