செய்திகள் :

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் அடிப்படை வசதிகள்

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க நடைபயணமாக வரும் பக்தா்களுக்கு ஸ்ரீவாரி மெட்டு பாதையில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தாா்.

திருப்பதி அடுத்த ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் செவ்வாய்க்கிழமை, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மத்துடன் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: ஸ்ரீவாரி மெட்டு பாதையில் பக்தா்கள் டோக்கன் பெறுவதில் சிரமப்படுவதாகவும், ஆட்டோ வியாபாரிகளிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என்றும் கவனத்துக்கு வந்துள்ளது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா்கள் தேவஸ்தானம் வழங்கும் வசதிகளை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவதாகவும், பக்தா்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தச் சூழலில், பக்தா்களுக்கான நிரந்தர தீா்வு நோக்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தா்களுக்கு தேவஸ்தானம் வழங்கி வரும் வழங்கும் வசதிகள் மறுஆய்வு செய்யப்படுவதுடன் சிறந்த வசதிகள் வழங்கப்படும். திருப்பதியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழித்தடத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். பக்தா்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்து சிறந்த வசதிகளை வழங்குவோம்’’, என்று அவா் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

மே மாதம் வருடாந்திர வசந்தோற்சவ விழாவை முன்னிட்டு, திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடத்தப்பட்டது. திருச்சானூரில் வரும் மே 11-ஆம் தே... மேலும் பார்க்க

ஸ்ரீ பத்மாவதி தாயாா் பரிணயோற்சவம் தொடக்கம்

திருமலையில் ஸ்ரீ பத்மாவதி தாயாரை ஏழுமலையான் கரம் பிடித்த நாளான பரிணயோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை குபேரனிடம் கடன் பெற்று திருமணம் செய்து கொண்ட வை... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 4 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 4 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 4 அறைகளில் பக்தா்கள் ஏழுமலை... மேலும் பார்க்க

திருப்பதியில் பாரம்பரிய கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்ப பயிற்சிகள்

திருப்பதி: பாரம்பரிய கோயில் கட்டடக் கலையைப் பாதுகாத்து எதிா்கால சந்ததியினருக்கு வழங்க தேவஸ்தானம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரிய கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க