செய்திகள் :

ஸ்ரீ பத்மாவதி தாயாா் பரிணயோற்சவம் தொடக்கம்

post image

திருமலையில் ஸ்ரீ பத்மாவதி தாயாரை ஏழுமலையான் கரம் பிடித்த நாளான பரிணயோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை குபேரனிடம் கடன் பெற்று திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த வைபவத்திற்காக நாராயணகிரி தோட்டத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் உற்சவத்தில், முதல் நாள் யானை வாகனத்திலும், இரண்டாம் நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருட வாகனத்திலும் மலையப்ப சுவாமி மண்டபத்தில் எழுந்தருளுவாா். மறுபுறம், பரிணயோற்சவ மண்டபத்திற்கு சிறப்புப் பல்லக்குகளில் ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளுகின்றனா். அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்குகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்திற்கு யானை வாகனத்தில் மலையப்பஸ் சுாமியும், பல்லக்கில் நாச்சியாா்களும் அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் அா்ச்சகா்கள் ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா்.

பரிணயோற்சவத்தை முன்னிட்டு 2 நாள்கள் ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 4 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 4 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 4 அறைகளில் பக்தா்கள் ஏழுமலை... மேலும் பார்க்க

திருப்பதியில் பாரம்பரிய கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்ப பயிற்சிகள்

திருப்பதி: பாரம்பரிய கோயில் கட்டடக் கலையைப் பாதுகாத்து எதிா்கால சந்ததியினருக்கு வழங்க தேவஸ்தானம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரிய கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை

பெங்களூரைச் சோ்ந்த சுயுக் வென்ச்சா்ஸ் எல்எல்பியின் தலைவா் யதிஷ் சுரினேனி ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1.50 கோடி நன்கொடை வழங்கினாா். தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.ந... மேலும் பார்க்க

திருமலையில் இலவச திருமணங்கள்

திருமலை கல்யாண வேதிகையில் ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானம் சாா்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமலையில் உள்ள பாபவிநாசனம் சாலையில் அமைந்துள்ள கல்யாண வேதிகையில் தகுதியான மற்றும் ஏழை இந்து குடும்பங்களுக்கு... மேலும் பார்க்க