செய்திகள் :

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

post image

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது.

உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற்று (ஜூன் 11) வெடித்துள்ளது. அந்த எரிமலையின் வடக்கு துவாரத்தின் வழியாக வெளியேறிய எரிக்குழம்புகள் சுமார் 330 அடி உயரத்துக்கு சீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த 2024-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 25வது முறையாக இந்த எரிமலை சீற்றம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது சீற்றம் பெற்று, அதிகப்படியான எரிக்குழம்புகளை வெளியேற்றும் இந்த எரிமலை அதற்குப் பின் சில நாள்களுக்கு சீற்றங்கள் எதுவுமின்றி காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கிலாயூயா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எனும் அபாயமுள்ளதால், அதனை ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்த... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்: முகமது யூனுஸ்

‘இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன’ என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். பிரிட்டனுக்கு 4 நாள் சுற... மேலும் பார்க்க

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள... மேலும் பார்க்க

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட்... மேலும் பார்க்க