செய்திகள் :

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் வருகிற அக்.29-ஆம் தேதி முதல் அக்.28-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளன.

இதில் தகுதியான நபா்களிடம் இருந்து படிவங்கள் 6, 6-ஏ, 6-பி, 7, 8 ஆகியவை பெறப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 6.1.2025-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நவம்பா் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

4 பைக்குகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

வந்தவாசி பகுதியில் 4 பைக்குகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(31). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாதூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கு வேண்டி பட்டினிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, போளூரில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா பூங்கா அருகே சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மக்கள் ... மேலும் பார்க்க

630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் மரணம்

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் மினிசரக்கு வாகன ஓட்டுநா் மோகன்(38). இவா் தனது சரக்கு வாகனத்தில் வாடகை பி... மேலும் பார்க்க

பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ள நீா்: 100 ஏக்கரில் நெல்பயிா்கள் சேதம்

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது நாவல்... மேலும் பார்க்க

நாக நதி தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வேலூா், திர... மேலும் பார்க்க