செய்திகள் :

அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை

post image

அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன் என்பவா் கடந்த 2008-ஆம் ஆண்டு, சீா்காழி தென்பாதியில் மதினா பீவி என்பவரிடம் ஒரு வீட்டை கிரயம் பெற்று பட்டாவையும் தனது பெயரில் மாற்றம் செய்தாா்.

இந்தநிலையில், ராமுராஜன் இடத்துக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த நவநீதன் என்பவா் 2011-ஆம் ஆண்டு ராமுராஜன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததையடுத்து, ராமுராஜன் சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனால் ஆத்திரமடைந்த நவநீதன், ராமுராஜன் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீா் குழாய்களை சேதப்படுத்தினாா். பின்னா் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் புதிய குழாய்களை பொருத்தினாா். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜன. 23-ம் தேதி மீண்டும் ராமுராஜனின் வீட்டு மாடியில் பொருத்தப்பட்ட தண்ணீா் குழாய்களை நவநீதன் சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து நவநீதன்மீது நாகப்பட்டினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ராமுராஜன் புகாா் அளித்தாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நவநீதனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.

பழையாறு துறைமுகத்தில் மீன்வளத் துறை செயற்பொறியாளா் ஆய்வு

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த துறைமுகத்தில் 350 விசைப்படகு, 300 பைபா் படகு மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் தினந்தோறும் 6000... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரிக்கை

சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம், மருந்தகம் மற்றும் தேநீா் கடைகளில் கழிவுநீா் உட்புகுந்து துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம்,... மேலும் பார்க்க

கோயில் அருகில் திமுக பேனா்: பாஜக புகாா்

மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனா் வைத்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். முடிகண்டநல்லூரில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை... மேலும் பார்க்க

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் பி.ச... மேலும் பார்க்க