செய்திகள் :

"அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை" - அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லும் விளக்கம்!

post image

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொட்டித் தீர்த்த பருவமழை
கொட்டித் தீர்த்த பருவமழை

இந்நிலையில் இன்று சென்னையின் அடையாறு பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் மா சுப்பிரமணியன், "அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி தூர் வாரியிருக்கிறார்கள். இந்த அடையாற்றில் ஒரே நேரத்தில் 40,000 அடி கன அளவு தண்ணீர் வந்தாலும் குடியிருப்புகளைப் பாதிக்காது. 500, 750 அடி என நீர்மட்டம் உயர்வதைப் பார்த்து யாரும் அச்சப்பட வேண்டாம்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மழைக்கால வேலையை தீவிரப்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

கடந்த ஐந்து நாள்கள் சென்னையில் மழைபெய்திருக்கிறது. ஆனாலும் மழை பாதிப்பு எங்கும் இல்லை. 16.93 செமீ அளவு பெய்தும் மழைநீர் எங்கேயும் தேங்கவில்லை. மக்கள் எந்த பாதிப்பிற்கும் ஆளாகவில்லை" என்று கூறியிருக்கிறார்.

"பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்" - விஜய்யை சாடிய கருணாஸ்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்ப... மேலும் பார்க்க

`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?

'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.என்ன பிரச்னை?இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்க... மேலும் பார்க்க

``எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திரு... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச... மேலும் பார்க்க

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க