செய்திகள் :

`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?

post image

'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.

என்ன பிரச்னை?

இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக,

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் அட்வான்ஸ்ட் கெமிக்கல் செல் பேட்டரி ஸ்டோரேஜ் தயாரிப்புகள்,

ஆட்டோமொபைல் சார்ந்த உற்பத்திகள், பயணிகள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியாவிற்குள் தயாரிக்க ஊக்குவித்து இந்திய அரசு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்தத் திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிகளை குறைக்கவும் செயலாற்றுகிறது.

இன்னும் மிக முக்கியமாக, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முயலுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள்
எலெக்ட்ரிக் வாகனங்கள்

இதில் சீனாவுக்கு என்ன பாதிப்பு?

உலகளவில் ஆட்டோமொபைல் பாகங்கள், எலெக்ட்ரிக் பேட்டரிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் இந்தத் திட்டங்களால் சீனாவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றலாம்.

அடுத்ததாக, சீனாவிடம் இந்தப் பொருள்களை வாங்கி வரும் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பலாம். இதனால், சீனாவின் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்படையலாம்.

சீனா இந்தியாவை பெரியளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தையாக பார்க்கிறது. இந்தியாவிலேயே சலுகைகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது, இறக்குமதி வாகனங்களை விட, இந்த வாகனங்களின்‌ விலை குறைவாக இருக்கும்.

சீனாவின் கூற்று என்ன?

இந்தியாவின் சலுகை திட்டங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இது சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் மீறல் ஆகும்.

மேலும், இத்தகைய திட்டங்கள் சீனாவின் ஏற்றுமதியைக் கடுமையாக பாதிக்கும்.

ஆக, இது மானியங்கள் மற்றும் எதிர் நடவடிக்கை நடவடிக்கைகள் ஒப்பந்தம் (SCM), கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கு தொடர்பான பொது ஒப்பந்தம், 1994 (GATT) மற்றும் வர்த்தகம் தொடர்பான முதலீட்டு நடவடிக்கைகள் ஒப்பந்தம் (TRIM) ஆகியவற்றின் விதிமீறல் என்று சீனா குற்றம்சாட்டுகின்றது.

உலக வர்த்தக மையம்
உலக வர்த்தக மையம்

இப்போது சீனா என்ன கேட்கிறது?

இந்தத் திட்டங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி வேண்டும்.

ஒருவேளை இது பலனளிக்காவிட்டால், அடுத்ததாக, இந்தியா மீது சீனா உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடுக்கும்.

இந்தியா மற்றும் சீனா- இரண்டு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் என்பதால் இது தான் நடைமுறை.

இந்தியா மட்டுமல்ல

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கி வருகின்றன.

இதனால், இந்தப் புகார் எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

``எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திரு... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச... மேலும் பார்க்க

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே... மேலும் பார்க்க

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க