செய்திகள் :

``எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

post image

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொட்டித் தீர்த்த பருவமழை
கொட்டித் தீர்த்த பருவமழை

இதுகுறித்துப் பேசியிருக்கும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
"வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதையடுத்து இரண்டு நாளில் இன்னொரு மழையும் வரலாம் என்று வானிலையாளர்கள் கூறுகிறார்கள். அது வலுவடை வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது."

அதை மனதில் வைத்து இந்த மழைக்காலத்தில் பணியாற்ற வேண்டும். மழைக்கால பணிகளைச் செய்து வருகிறோம். அப்போது தொடர்ந்த மழையால் அங்காங்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. ஆய்வுக்காக நான் களத்திற்குச் செல்லும்போதெல்லாம் மக்கள்,
"எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கு, வந்து பாருங்க" என கோபமாக அல்லாமல் அன்புக் கோரிக்கையாக வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கூப்பிடுகிறார்கள்.
"நீங்கள் வந்து பார்த்தீங்கனா எல்லாம் சரியாக நடக்கும், அதிகாரிகள், கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என சொல்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

"பாதிப்புகள், தவறுகளை முதல்வர் கேள்வி கேட்டால் உடனே நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இந்த மழையில் மக்களோடு நாம் நிற்க வேண்டும். என்றும் அவர்களுக்காக நாம் நிற்போம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்," என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?

'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.என்ன பிரச்னை?இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்க... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச... மேலும் பார்க்க

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே... மேலும் பார்க்க

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க