செய்திகள் :

காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

post image

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள செய்தியறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 16ம் தேதி பிறந்த அந்தப் பெண் குழந்தைதான் நாட்டிலேயே இந்தப் பெயர் சூட்டப்படும் முதல் குழந்தை.

காசா
காசா

அவரின் தந்தை, ஹம்தான் ஹதாத், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love Aid Singapore) என்ற அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு சூப் கிச்சனில் சமையல்காரராகப் பணிபுரிகிறார். இந்த அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளாக வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.

இந்த அறக்கட்டளையை நடத்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கில்பர்ட் கோ தெரிவித்திருப்பதன்படி, கர்ப்ப காலத்தில் ஹம்தாத்தின் மனைவி அறக்கட்டளையின் சமையலறை உணவையே முழுமையாக நம்பியிருந்துள்ளார். காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் தலைவிரித்தாடுகையிலும் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மகளுக்கு சிங்கப்பூர் எனப் பெயரிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் மக்களை தான் மிகவும் நேசிப்பதகாவும் அதனால் தன் மகளுக்கு இந்த பெயரை வைத்துள்ளதாகவும் ஹமத் கூறியிருக்கிறார். குழந்தை சிங்கப்பூர் இப்போது ஒரு கூடாரத்தில் வசித்து வருகிறார்.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை இணையத்தில் பகிர்ந்துள்ளது லவ் எய்ட் சிங்கப்பூர். இது அறக்கட்டளைக்கும் அதன் பணியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அந்தப் பதிவில் கூறியுள்ளனர்.

மேலும், "மனிதாபிமானத்தின் சரியான பக்கத்தில் நின்றதற்காக சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி. லவ் எய்ட் சிங்கப்பூரில் மனிதத்துக்கு இனம், மதம் மற்றும் எல்லைகள் கிடையாது" என்றும் பதிவிட்டுள்ளனர்.

புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்... மேலும் பார்க்க

"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்வில் வெளியான தகவல்

அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டேட... மேலும் பார்க்க

`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உம... மேலும் பார்க்க

போனஸ் கொடுக்காத கோபம்; டோல்கேட்டை திறந்த ஊழியர்கள்; பணம் கொடுக்காமல் சென்ற வாகனங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் லக்னோவை இணைக்கும் வகையில் யமுனை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் இருக்கிறது. இதில் பதேஹாபாத... மேலும் பார்க்க