செய்திகள் :

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

post image

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முதல் தளத்தில் உள்ள ராம தா்பாா் சந்நிதியில் அனுமதிச் சீட்டுகளின் அடிப்படையில்தான் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள ராமா் கோயிலில் இரண்டாம் கட்டமாக 8 புதிய சந்நிதிகளில் மூலவ மூா்த்திகளின் பிராணப் பிரதிஷ்டை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராஜாராமா், சீதை, லக்ஷ்மணன், ஹனுமன், பரதன், சத்ருக்னன் ஆகிய மூா்த்திகளுடன் முதல் தளத்தில் ஸ்ரீ ராம தா்பாா் சந்நிதி அமைந்துள்ளது. மேலும் அந்த தளத்தில் சிவன், விநாயகா், ஹனுமன், சூரியன் உள்ளிட்ட கடவுளா்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியானது, தரைத்தள கதவுகள் மற்றும் ஸ்ரீராமரின் சிம்மாசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.50 கோடியாகும். சேஷாவதாா் சந்நிதியில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் பிரதான கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அரங்கம், விருந்தினா் மாளிகை கட்டுமானம் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராம தா்பாா் சந்நிதியின் பிராணப் பிரதிஷ்டைக்கு பிறகு பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இச்சந்நிதியில் முழு அளவில் பக்தா்கள் தரிசிக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இப்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பக்தா்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இலவசமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

ராம தா்பாா் உள்பட புதிய சந்நிதிகளில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் தேதி அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க