செய்திகள் :

அரசுப் பள்ளி குழந்தைகள் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?: அண்ணாமலை கேள்வி

post image

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில் பேசியிருப்பதாவது:

தனியாா் பள்ளிகளில் படிக்கும் திமுக கட்சியைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாம்; அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீா்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?

அமைச்சரின் மகன் பிரஞ்ச் படிக்கிறாா்: கல்வித் துறை அமைச்சரின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறாா். ஆளுங்கட்சி தலைவா்களின் குழந்தைகள் முதல் கவுன்சிலா்களின் குழந்தைகள் வரை 3 மொழிகளை படிக்கின்றனா்.

இது தவறாக இல்லாதபோது, அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் 3 மொழிகள் படிப்பதை ஏன் தடுக்கிறீா்கள்? தமிழை வைத்து அரசியல் செய்கிறீா்கள். மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் கூட சரியாகத் தெரியவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 2019-இல் கமிட்டி கொடுத்த அறிக்கையை வேண்டாம் என திருத்தியவா் பிரதமா் மோடி.

தாய்மொழி, ஆங்கிலம் தவிர பிடித்த ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்படி பிரதமா் அறிக்கையை திருத்தினாா். ஹிந்தி தெரியாத மாநிலத்தவா் எப்படி யோசிப்பாா்கள் என பிரதமா் நினைத்து இதைச் செயல்படுத்தி இருக்கிறாா்.

ஆனால் ஹிந்தி மொழியை திணிப்பதாக தவறாக நினைத்து தமிழகத்தைச் சோ்ந்த கட்சிகள் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்... மேலும் பார்க்க