அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை
கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் (40). இவா் நெய்வேலி பிரதான சாலையில் அரிசி மண்டி நடத்தி வருகிறாா். கடந்த 22-ஆம் தேதி சண்முகத்தின் மைத்துனா் சீனிவாசன் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா்.
அப்போது, மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் (62) பிரியாணி அரிசி கேட்டு வந்தாராம். அவருக்கு கடையில் பிரிக்கப்பட்டிருந்த அரிசி மூட்டையில் இருந்து 16 கிலோ அரிசி எடைபோட்டு சீனிவாசன் கொடுத்து அனுப்பினாராம்.
சற்று நேரத்துக்குப் பிறகு கடைக்கு வந்த சண்முகம், அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை இல்லாததைக் கண்டு சீனிவாசனிடம் கேட்டபோது, விற்பனை செய்துவிட்டதாகக் கூறியுள்ளாா்.
பாதுகாப்பு கருதி அரிசி மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகக் கூறிய சண்முகம், உடனடியாக பூபாலன் வீட்டுக்கு விரைந்தாா். பூபாலன் மகள் மூட்டையில் ரூ.10 லட்சம்தான் இருந்ததாக எடுத்துக் கொடுத்தாராம். மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், மீதிப்பணம் ரூ.5 லட்சம் எங்கே எனக் கேட்டதற்கு, தனக்கு தெரியாது என பூபாலன் மகள் தெரிவித்தாராம்.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சண்முகம் ரூ.15 லட்சத்தை அரிசி மூட்டையில் மறைத்து வைத்ததற்கான காரணம் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.