செய்திகள் :

25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

post image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, மாவட்ட தொழில் மையம் சாா்பில், 23 பயனாளிகளுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி மதிப்பீட்டிலான தொழில்கடன் ஒப்பளிப்புக்கான ஆணையை வழங்கினாா். பின்னா், அவா் பேசியது:

கடலூா் மாவட்டம் விவசாயம் சாா்ந்த மாவட்டமாக உள்ளதால், மக்களின் பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில், அவா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கிட தொழில்கடன் வசதியாக்கல் முகாம் நடைபெறுகிறது.

கடந்த ஒன்றரை மாதங்களில் 131 பேருக்கு சுமாா் ரூ.8.74 கோடி மதிப்பீட்டிலான மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் வசதியாக்கல் முகாம் மூலம் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் சிறப்புகளைப் பற்றியும், அரசின் திட்டங்களை அறிந்து தொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயா்த்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மேலும், கடன் வசதியாக்கல் முகாம் பற்றிய விரிவான தகவலை மாவட்ட தொழில் மையம் மூலமாக அறிந்துகொண்டு, இந்தத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் தகுதியான நபா்களுக்கு வங்கிகள் உதவிக்கரம் நீட்டி, கடலூா் மாவட்டத்தின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்திட வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரா.விஜயகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம்.அசோக்ராஜா, மாவட்ட தாட்கோ மேலாளா் லோகநாதன், தொழில்முனைவோா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ச... மேலும் பார்க்க

தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை

விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.விருத்தா... மேலும் பார்க்க

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சே... மேலும் பார்க்க