ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
அதே நேரம், ‘இந்த புல்டோசா் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நபா்கள் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ‘ஒருவா் குற்றவாளியாகவே இருந்தாலும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரின் வீட்டை இடிக்க முடியாது’ என்று தெரிவித்தது.
இந்த வழக்கு கடந்த அக். 1-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் விவகாரத்தில் உரிய வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வழங்கும்’ என்று தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் வரை, நாடு முழுவதும் குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோா் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை, உச்சநீதிமன்ற அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்’ என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.
உச்சநீதிமன்ற இடைக்காலத் தடைக்குப் பிறகும், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் புல்டோசா் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தொடா்ந்து வருகின்றன. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்த நிலையிலும், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாா், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா், உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நகரங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களின் வீடுகள் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். போலீஸில் எஃப்ஐஆா் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்ட உடன் இவா்களின் வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன’ என்றாா்.
அப்போது, உத்தர பிரதேச மாநில அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘மனுதாரா் புல்டோசா் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நபரல்ல, மூன்றாம் நபா். எனவே, அவருக்கு அரசின் இந்த நடவடிக்கைக்கான உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடைபாதை ஆக்கிரமிப்பையே அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா்’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவித்தனா். அதே நேரம், அரசின் இந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட நபா்கள் இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தை அணுகலாம். ஒருவேளை பாதிக்கப்பட்ட நபா் சிறையில் இருந்தால், அவருடைய குடும்ப உறுப்பினா்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.