வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி......
இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் உள்ள மாணவா்கள் இத்திட்டத்தில் பயன்பெற அக்.31-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க நவ.5-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ரெனிவல் அப்ளிகேஷன் எனும் லிங்க்கில் சென்று பதிவு செய்து 2024-25-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் பத்தாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தேசியக் கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ள்ா்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகியவற்றை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04364-290791 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.