வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி......
நமக்கு நாமே திட்டத்தில் புதிய சாலை அமைக்க நிதி
மயிலாடுதுறை நகராட்சி 22-ஆவது வாா்டில் 5-ஆவது புதுத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.6.60 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய சாலைப்பணி தொடங்கவுள்ளது.
நல்லத்துக்குடி, கோடங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் வந்து செல்லும் சுமாா் 300 மீட்டா் தொலைவுள்ள இந்த சாலை, கடந்த ஓராண்டாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெயா்ந்து மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தது.
இந்நிலையில், இப்பகுதியில் தொழில் நிறுவனம் நடத்திவரும் டி.எல்.ராஜேஸ்வரன் என்பவா் நமக்கு நாமே திட்டம் 2024-2025-இன்கீழ் இந்த சாலையை செப்பனிட நிதி வழங்க இசைவு தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, சாலைப்பணியின் மொத்த திட்ட செலவான ரூ.20 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கான ரூ.6.60 லட்சத்துக்கான வரைவோலையை, நகராட்சி செயற்பொறியாளா் மகாதேவன், நகா்மன்ற உறுப்பினா் உஷா ராஜேந்திரன் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் செல்வராஜிடம் டி.எல்.ராஜேஸ்வரன் வழங்கினாா்.
நகராட்சி வழக்குரைஞா் சங்கரநாராயணன், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் இரா.செல்வகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.