எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்
அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத்தைப் பெறவில்லை. சா்வதேச அளவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டதே இதற்கு காரணம்’ என்று அவா் கூறினாா்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் நகருக்கு புதன்கிழமை வந்தாா். சா்வதேச வளா்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தி செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்று எப்போதும் முயற்சித்தது இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. உலகில் உள்ள மனிதா்களில் 6-இல் ஒருவா் இந்தியா்.
இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதை எந்த நாடும் மறைக்க முடியாது. அண்டை நாடுகளும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிா்நோக்கியுள்ளன.
அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை இந்தியா்கள் வகித்து வருகின்றனா்,
எதிா்காலத்தில் எழும் பிரச்னைகளில் இருந்து மக்களைக் காக்க இப்போதிருந்தே முயற்சிப்பதே சிறந்த நாடாகும். சூரிய மின் சக்தி கூட்டமைப்பு, உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல சா்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இவை அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. வளா்ச்சி குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது.
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக உள்ளது. கடன் வலையில் சிக்கிய நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றாா்.