செய்திகள் :

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

post image

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது:அருகம் வளைகுடா பகுதியில் இரண்டு பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இரு வாரங்களுக்கு முன்னா் அந்தப் பகுதியில் இஸ்ரேலியா்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது (படம்). அதன் தொடா்ச்சியாக, இராக்கிலிருந்து வந்தவா் உள்பட இருவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினா் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரா்கள் மூன்று போ் உயிரிழந்தனா்.இது குறித்து லெபனான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தெற்குப் ... மேலும் பார்க்க

இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புஷ்ரா பீபி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மியான்குல் ஹஸன் ஔரங்கசீப், புதன்கிழமை அந்த மனுவை ஏற்றாா்.ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்க... மேலும் பார்க்க

கிறிஸ்தவ மதநிந்தனை: பாகிஸ்தானில் ஜாகீா் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா்கள் அந்த நாட்டு அதிபா் மற்றும் பிரதமருக்கு புகாா் அனுப்பியுள்ளனா். இந்த... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதா்

ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதி... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விமர்சித்த ஈரான் அதிபர்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் விமர்சித்துள்ளார். ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநா... மேலும் பார்க்க

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதி தேவை: ஐ. நா. பொதுச்செயலாளர்

எல்லைகளில் அமைதி தேவை என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன்று (அக். 24) தெரிவித்தார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் அவர் இதனை வலியுறுத்... மேலும் பார்க்க