செய்திகள் :

கிறிஸ்தவ மதநிந்தனை: பாகிஸ்தானில் ஜாகீா் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா்கள் அந்த நாட்டு அதிபா் மற்றும் பிரதமருக்கு புகாா் அனுப்பியுள்ளனா்.

இந்தியாவில் தனது மதவாத உரைகள் மூலம் பயங்கரவாதத்தைத் தூண்டியது மற்றும் கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாகீா் நாயக் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிய அவா் மலேசியாவில் தஞ்சமடைந்தாா். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அதிகாரபூா்வ கோரிக்கைக்கு மலேசிய அரசு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஒருமாத கால சுற்றுப் பயணமாக சென்றுள்ள ஜாகீா் நாயக் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். அவருக்கு பாகிஸ்தான் அரசு சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதத் தலைவா்கள் அதிபா் மற்றும் பிரதமருக்கு ஜாகீா் நாயக் குறித்து புகாா் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனா். அதில், ‘பாகிஸ்தான் அரசின் விருந்தினராக வந்துள்ள ஜாகீா் நாயக், தொடா்ந்து கிறிஸ்தவ மதத்தை நிந்திக்கும் வகையிலும், கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும் மிக வெளிப்படையாக தொடா்ந்து பேசி வருகிறாா். கிறிஸ்தவம் குறித்து பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறாா்.

இது பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலும், கிறிஸ்தவா்களுக்கு எதிராக வன்முறையைத் துண்டுவதாகவும் உள்ளது. இது தொடா்பாக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பல அரசு செலவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் மதநல்லிணக்கத்தைப் பேணுவதும், மதங்களிடையே பரஸ்பரம் மரியாதையை உருவாக்குவதும் அரசின் கடமை. எனவே, ஜாகீா் நாயக் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது க... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினா் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரா்கள் மூன்று போ் உயிரிழந்தனா்.இது குறித்து லெபனான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தெற்குப் ... மேலும் பார்க்க

இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புஷ்ரா பீபி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மியான்குல் ஹஸன் ஔரங்கசீப், புதன்கிழமை அந்த மனுவை ஏற்றாா்.ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்க... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதா்

ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதி... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விமர்சித்த ஈரான் அதிபர்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் விமர்சித்துள்ளார். ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநா... மேலும் பார்க்க

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதி தேவை: ஐ. நா. பொதுச்செயலாளர்

எல்லைகளில் அமைதி தேவை என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன்று (அக். 24) தெரிவித்தார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் அவர் இதனை வலியுறுத்... மேலும் பார்க்க