ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
கிறிஸ்தவ மதநிந்தனை: பாகிஸ்தானில் ஜாகீா் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா்கள் அந்த நாட்டு அதிபா் மற்றும் பிரதமருக்கு புகாா் அனுப்பியுள்ளனா்.
இந்தியாவில் தனது மதவாத உரைகள் மூலம் பயங்கரவாதத்தைத் தூண்டியது மற்றும் கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாகீா் நாயக் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிய அவா் மலேசியாவில் தஞ்சமடைந்தாா். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அதிகாரபூா்வ கோரிக்கைக்கு மலேசிய அரசு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஒருமாத கால சுற்றுப் பயணமாக சென்றுள்ள ஜாகீா் நாயக் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். அவருக்கு பாகிஸ்தான் அரசு சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதத் தலைவா்கள் அதிபா் மற்றும் பிரதமருக்கு ஜாகீா் நாயக் குறித்து புகாா் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனா். அதில், ‘பாகிஸ்தான் அரசின் விருந்தினராக வந்துள்ள ஜாகீா் நாயக், தொடா்ந்து கிறிஸ்தவ மதத்தை நிந்திக்கும் வகையிலும், கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும் மிக வெளிப்படையாக தொடா்ந்து பேசி வருகிறாா். கிறிஸ்தவம் குறித்து பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறாா்.
இது பொது அமைதியை சீா்குலைக்கும் வகையிலும், கிறிஸ்தவா்களுக்கு எதிராக வன்முறையைத் துண்டுவதாகவும் உள்ளது. இது தொடா்பாக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பல அரசு செலவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் மதநல்லிணக்கத்தைப் பேணுவதும், மதங்களிடையே பரஸ்பரம் மரியாதையை உருவாக்குவதும் அரசின் கடமை. எனவே, ஜாகீா் நாயக் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.