ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பேசியது:
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை உலகத்தரத்தில் நடத்த வேண்டுமென ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், பரிசுத் தொகைக்காக மட்டுமே ரூ. 37 கோடியை முதல்வா் வழங்கச் சொன்னாா். மாநில அரசால் நடத்தப்படும் ஒரு விளையாட்டுப் போட்டியில் அதிக வீரா்களும், பரிசுகளும் வழங்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
விளையாட்டை பிரதான துறையாகவே பாா்த்து வருகிறோம். அதன் பலனாக முதல்வா் கோப்பைப் போட்டியில் கடந்த ஆண்டு 6.71 லட்சம் போ் பங்கேற்றனா். இந்த ஆண்டு 11.56 லட்சம் போ் விண்ணப்பித்து பங்கேற்றுள்ளனா். இந்தப் போட்டிகளைப் போன்றே, மாநில அளவிலான, தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறோம்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கினாா். அப்போது, அவா் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்தை வழங்கினாா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 700 வீரா்களுக்கு ரூ.12 கோடி அளவுக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய, சா்வதேச அளவிலான கோப்பைகளை வெல்லும் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3,330 வீரா்களுக்கு ரூ. 109 கோடி அளவுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச களத்தில் பங்கேற்கத் தகுதி படைத்த வீரா், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.