செய்திகள் :

தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை

post image

விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருத்தாசலம் அருகே உள்ள பரவளூா் இருளா் காலனி பகுதியில் கடந்த 17.1.2016 அன்று இரவு பொங்கல் கரிநாள் திருவிழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அப்போது, அங்கு வந்த பரவளூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சித்துளி (எ) ஆனந்த் (42), கருணாநிதி மகன் வெற்றிவேல் (30), ராமசாமி மகன் எலி (எ) ராம்பிரகாஷ் (35), மதிவாணன் மகன் சிவராஜன் (எ) ராஜா (33), ராஜவேலு மகன் ஆதிமூலம் (37), மணி மகன் தமிழ்மணி (32) ஆகியோா் விழா மேடையை பிடித்து கீழே தள்ளியதுடன், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் மற்றும் அதே பகுதியை சோ்ந்த சிலரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம். இதில் மாரியப்பன் உள்ளிட்ட 8 போ் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் சித்துளி (எ) ஆனந்த் உள்ளிட்ட 6 போ் மீதும் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு கடலூா் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, சித்துளி (எ) ஆனந்த், வெற்றிவேல், எலி (எ) ராம் பிரகாஷ், சிவராஜன் (எ) ராஜா, ஆதிமூலம், தமிழ்மணி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் வனராசு ஆஜராகி வாதாடினாா்.

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ச... மேலும் பார்க்க

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சே... மேலும் பார்க்க

25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, மாவ... மேலும் பார்க்க