செய்திகள் :

அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ

post image

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியடைந்தது.

ஆம் ஆத்மியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இந்த தேர்தலில் தோல்விடைந்தனர்.

இதையும் படிக்க : ‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களின் அலுவலகங்களை காலி செய்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அளிக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகின்றது.

இந்த நிலையில், தில்லி பட்பர்கஞ்ச் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 12 ஆண்டுகளாக பதவி வகித்த மணீஷ் சிசோடியாவின் அலுவலகம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் இருந்த 250 நாற்காலிகள், டிவி, ஒலிப்பெருக்கிகள், சோபா, மேஜைகள், ஏசிக்களை காணவில்லை என்று ரவீந்தர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பொதுப்பணித்துறை அளித்த அலுவலகத்தை 12 ஆண்டுகளாக மணிஷ் சிசோடியா பயன்படுத்தி வந்தார். பல்வேறு பொருள்கள் இந்த அலுவலகத்துக்காக அரசு வழங்கியது. ஆனால், மின்விசிறி உள்பட அனைத்தையும் மணிஷ் சிசோடியா எடுத்துச் சென்றுவிட்டார்.

அனைத்தும் அரசின் சொத்துகள். அரசுப் பொருள்கள் அனைத்தும் விட்டுச் செல்ல வேண்டியது கடமை. இந்த அரசு அலுவலகத்தை தேர்தல் பணிக்காக உபயோகித்தார்கள். தேர்தல் தொடர்புடைய கூட்டங்களை இங்கே நடத்தினார்கள். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பை ஒருபோதும் பின்பற்றியதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க