செய்திகள் :

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

post image

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பாகிஸ்தானிடம் இருக்கும் வரை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பி வைக்கும் என்றும் அவா் கூறினாா்.

மும்பை அருகே லோனாவாலாவில் செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான அதாவலே இது தொடா்பாக மேலும் கூறியதாவது: காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய நிகழ்வு. காஷ்மீரில் அமைதியைச் சீா்குலைப்பதே இதன் நோக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்று ஒன்று இருக்கும் வகை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பிவைத்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்.

அவா்கள் தர மறுத்தால், அந்நாட்டுக்கு எதிராக போா் பிரகடனம் அறிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு வெளியேறுவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பாகிஸ்தான் தொடா்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தமுறை மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.

தேச நலன் என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அம்பேத்கா் நமக்கு கற்பித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்தது. வாக்குப் பதிவு சதவீதமும் உயா்ந்தது. நாட்டின் பிற பகுதி மக்களைப் போல காஷ்மீா் மக்களும் இயல்பான வாழ்க்கைக்குத் திருப்பினா். இதனை பயங்கரவாதிகளாலும், பாகிஸ்தானாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தமுறை ஜம்மு-காஷ்மீா் மக்களும் முக்கியமாக அங்குள்ள இஸ்லாமியா்கள் முழுமையாக இந்தியாவின் பக்கம் உள்ளாா்கள். இந்திய தேசத்தின் ஒற்றுமையும் வலிமையும்தான் நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா் என்றாா் அவா்.

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க