செய்திகள் :

பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

post image

மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன.

இருப்பினும், ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், பிஎஸ்இ பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 442.94 புள்ளிகள் உயர்ந்து 80,661.31 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செகஸ் 70.01 புள்ளிகள் உயர்ந்து 80,288.38 ஆகவும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.45 புள்ளிகள் உயர்ந்து 24,335.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, எடர்னல், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் இதற்கு நேர்மாறாக அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மா, பவர் கிரிட், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,474.10 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் ஆகியவை சரிந்து முடிந்தது.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.59% குறைந்து 64.81 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ்... மேலும் பார்க்க

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் வகையில் மெர்ஸிடிஸின் புதிய செடான் இவி காரை அறிமுகம் செய்யவிருக்கிறது மெர்ஸிடிஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.... மேலும் பார்க்க

ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முற... மேலும் பார்க்க

ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!

பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க