செய்திகள் :

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!

post image

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் வகையில் மெர்ஸிடிஸின் புதிய செடான் இவி காரை அறிமுகம் செய்யவிருக்கிறது மெர்ஸிடிஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெர்ஸிடிஸ் நிறுவனம் தங்களது தயாரிப்பிலேயே குறைந்த விலையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய செடான் காரை ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய வகை CLA கார்கள் மின்சாரத்திலும், ஹைபிரிட் மாடலிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய வகை CLA EV கார்கள் இரண்டு மேம்படுத்தப்பட்ட வகைகளில் கிடைக்கிறது.

ஒன்று CLA 250+ மற்றொன்று CLA 350 4 Matic. முதல் வகை CLA 250+ காரில் 272 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 0 முதல் 100 மீட்டர் தூரத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

அதேநேரத்தில், CLA 350 4Matic காரில் முன்னால் இருக்கும் அச்சில் கூடுதலாக 108 குதிரைத்திறன் வெளிப்படுத்தும் வகையில் மொத்தமாக 354 குதிரைத்திறனை வெளிப்படுத்தும்.

இது 4.9 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை எட்டும் என்று அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இருவகை கார்களிலும் 85 kWh மின்கலன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

CLA 250+ கார் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 792 கி.மீட்டரும், CLA 350 4Matic காரில் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 770 கி.மீட்டரும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 10 நிமிஷங்கள் சார்ஜ் ஏற்றினால், 300 கி.மீட்டர் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ.31.72 லட்சத்தில் தொடங்கி ரூ.77.69 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கோடைக் கால விற்பனை: ஸ்மார்ட் போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன. இருப்பி... மேலும் பார்க்க

ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முற... மேலும் பார்க்க

ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!

பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க