செய்திகள் :

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

post image

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதமரை மோகன் பகவத் சந்தித்துள்ளார்.

பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக பிரதமரை அவர் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏப். 22 ஆம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதுவரை 537 பேர் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியா்கள் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியா்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்து சௌரியா சக்ரா விருது பெற்ற காவலா் முதாசிா் அகமது ஷேக்கின் தா... மேலும் பார்க்க

வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றாவதாக எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. புது தில்லியைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தோ்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவா், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கோட்டாவில், நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் மைய... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்: மத்திய வா்த்தக அமைச்சகம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இருநாட்டு அதிகாரிகள் சந்தித்து விவாதித்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக ... மேலும் பார்க்க

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்? அட்டாா்னி ஜெனரல் பதில்

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபா்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் (அட்டாா்னி ஜெனரல் ... மேலும் பார்க்க

நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு: லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு

வைரத் தொழிற்சாலை மற்றும் நிதிதொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதால், இந்தியாவுடன் பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்... மேலும் பார்க்க