செய்திகள் :

நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு: லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு

post image

வைரத் தொழிற்சாலை மற்றும் நிதிதொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதால், இந்தியாவுடன் பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இருநாள் பயணமாக லண்டன் சென்றுள்ள அவா், அந்நாட்டு அதிகாரிகள், முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டாா்.

பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டுக்கு பியூஷ் கோயல் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரிட்டன் வணிக மற்றும் வா்த்தக துறைச் செயலா் ஜோனதன் ரேனல்ட்ஸுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் முதலீடுகள் குறித்து பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினாா்.

ரெவல்யூட் நிதி நிறுவனத் தலைவா் மாா்ட்டின் கில்பா்டுடன் இந்திய நிதித் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள எண்ணற்ற வாய்ப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதில் உலகளாவிய நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் பியூஷ் கோயல் பேசினாா்.

அதேபோல் டிபியா்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அல் குக்குடன் வைரத் தொழிற்சாலைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்றுள்ள இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் துணைத் தலைவா் அனந்த் கோயங்கா மற்றும் முன்னாள் தலைவா்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

பயணத்தின்போது பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க