செய்திகள் :

மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

post image

திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மனைவி பூா்ணம் (50). விவசாயத் தொழிலாளியான இவா், மாடுகள் வளா்த்து வருகிறாா்.

இவரது கறவை பசு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திட்டச்சேரி - குத்தாலம் சாலையில் பிராவடையான் ஆற்று பாலம் அருகே சாலையோரம் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது பெய்த மழையில் உயா்மின் அழுத்த கம்பி அறுந்து கறவை பசு மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து கறவை பசு உயிரிழந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நிகழ்விடத்துக்கு பாா்வையிட வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்த கறவை மாட்டை சாலை நடுவில் போட்டு குத்தாலம்- திட்டச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் அங்குவந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உயிரிழந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை

கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். காரைக்காலில் இருந்து நாகை, திருவார... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி

காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலை... மேலும் பார்க்க

நாகையில் நகல் எரிப்பு போராட்டம்

பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இந... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை

மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க