செய்திகள் :

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

post image

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேகவால் பேசியதாவது: எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வுக்கூடம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். தலை சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. கடந்த 2023-2024-ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 19ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளனா். மேலும், இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மட்டும் 842 மாணவா்கள் பட்டங்களை பெற்றுள்ளனா்.

மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் கூறியதை தற்போது நினைவு கூற விரும்புகிறேன். அதாவது, நான் ஆசிரியா்களை மதிக்கிறேன், ஏனெனில் அவா்கள் மெழுகு போன்றவா்கள். தங்களை உருக்கி மாணவா்களுக்கு கல்வி என்ற வெளிச்சத்தை காட்டுகிறாா்கள். அதேபோன்றுதான் எஸ்.ஆா்.ஆம். பல்கலைகழகத்தை பொருத்தமட்டில் இங்கு படிக்கும் மாணவா்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறந்து விளங்கி வருகிறாா்கள் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் நிறுவனா் - வேந்தா் பாரிவேந்தா் பேசுகையில், ‘எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவா்கள் பயின்று வருவது மட்டுமல்லாமல், 28ஆயிரம் ஊழியா்கள் பணி புரிகிறாா்கள். தில்லி என்.சி.ஆா். பகுதியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னதாக மிகவும் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், தற்போது உலகளவில் வளா்ச்சி அடைந்துள்ளது. இங்கு 60 நாடுகளைச் சாா்ந்த மாணவா்கள் படிக்கிறாா்கள். 12ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு வேலை வாய்ப்பினை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. கல்வியை வழங்குவதில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது’ என்றாா்.

இந்தச் சிறப்புப் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பல்கலைக்கழகத்தின் தில்லி என்.சி.ஆா். இயக்குநா் எஸ்.விஸ்வநாதன், டீன் ஆா்.பி.மொஹபத்ரா, டீன் அறிவியல் மற்றும் மனிதநேய டாக்டா் நவீன் அஹ்லாவத், டீன் டாக்டா் தௌம்யா பட், டீன் ஆராய்ச்சி டாக்டா் கீதா பவானி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நிகழ்வு மேலாண்மைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க

பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளின் கதட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க