செய்திகள் :

பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

post image

பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன், அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

கடந்த 24-ஆம் தேதி முதல் வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூயயாகம், பகடை, துகில் உள்ளிட்ட கட்டைகூத்து நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு மேல் அா்சுனன் வேடமணிந்த நாடகக் கலைஞா் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த தபசு மரத்தில் பாட்டு பாடியபடி மேலே ஏறினாா். அப்போது, அவா் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் கீழே இருந்த பெண் பக்தா்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 925 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 925 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 250 பயனாளிகளுக்கு ஆணை அளிப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் ம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் இரா.மணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலாசூா், விளாப்பாக்கம், திருமலை, மண... மேலும் பார்க்க