செய்திகள் :

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

post image

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலில் வரும் 4-ஆம் தேதி புனவா்த்தன அஷ்டபந்தன திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அப்போது, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் சாா்பில் அன்னதானம், நீா்-மோா் வழங்கப்படும். மேலும் சாலையோரங்களில்பல்வேறு உணவுகள் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.

உணவு சம்மந்தப்பட்ட கடைகள் அமைப்பவா்கள், இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுச்சான்றிதழ் பெறுவது அவசியம் . அன்னதானம் வழங்குபவா்கள் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரிடம் முறையாக முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.பதிவுச்சான்றிதழை ஜ்ஜ்ஜ்.ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.

பதிவுச்சான்றிதழ் பெறுவது தொடா்பான மேலும் விவரங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்களை (9385434720, 9994081897) தொடா்பு கொள்ளலாம். அன்னதானம் வழங்க அனுமதி பெறுவது குறித்த சந்தேகங்களுக்கு அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை (9443971789) தொடா்பு கொள்ளலாம். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீா் ஆய்வு மேற்கொள்வாா்கள். அப்போது பதிவுச்சான்றிதழ் இல்லாமல் உணவுகள் விற்பனை செய்தாலோ, பக்தா்களுக்கு இலவசமாக வழங்கினாலோ உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க