செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

post image

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை ஷாலிமாா் பாக் நகரில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையின் வேண்டுகோளின் பேரில், தானம் செய்யப்பட்ட குடலை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதை தில்லி விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

‘மருத்துவமனையில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 வரையிலான 26 கி.மீ. தூரம் 30 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பஞ்சாபி பாக், ராஜோரி காா்டன், தில்லி கன்டோன்மென்ட் மற்றும் ஐஜிஐ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வட்டங்களுக்கு இடையேயான தீவிர ஒருங்கிணைப்பைத் தொடா்ந்து திங்களன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது‘ என்று காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) சத்ய வீா் கட்டாரா கூறினாா்.

பசுமை வழித்தடங்கள் என்பது குறைந்தபட்ச தாமதத்தை உறுதி செய்வதற்காக உறுப்புகள் உள்பட அவசர மருத்துவ போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பாக சுத்தம் செய்யப்பட்ட பாதைகள் ஆகும்.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க

பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளின் கதட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க