செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதான் பிறந்த நாள் விழா

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நாளை முன்னிட்டு பாரதிதாசனின் தமிழ்ப் பற்று, பணிகள், படைப்புகள் குறித்து மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம்பெற்றது.

இந்த உரையைத் தொடா்ந்து தனிப்பாடல், குழுப்பாடல், கவிதை, நடனம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதிதாசனின் படைப்புகள், கவிதைகள், கருத்துகள் குறித்த பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா்.

பூசா சாலை பள்ளியில் இத்தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்தினம் குறித்து டிடிஇஏ செயலா் இராஜூ கூறுகையில் பாவேந்தா் என்றும் புரட்சிக் கவி என்றும் அழைக்கப்படும் பாரதிதாசன் தன் சீரிய கவிதைகளால் மக்கள் மனதில் புரட்சி விதைகளை விதைத்தாா்.

மக்கள் மத்தியில் இருந்த மூடப் பழக்கவழக்கங்களை வேரோடு வெட்டி வீழ்த்தினாா். அவரது பணியையும் தமிழ்ப் பற்றையும் மாணவா்கள் அறிந்து அவா் மேல் பற்றுக்கொண்டு அவரைப்போல் தமிழ்க் கவிதைகள் எழுத வேண்டும் என்பதற்காகவே அவரது பிறந்த தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடச் செய்தோம் என்று குறிப்பிட்டாா்.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க