தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை
மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சேதுபதி (31). இவா், மனைவி ராஜேஸ்வரியுடன்(30) வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை வந்து தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ஊழியா்கள் அறைக்குச் சென்று பாா்த்தபோது, இருவரும் தரையில் கிடந்துள்ளனா். விடுதி ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் அறை கதவை திறந்து தரையில் கிடந்த இருவரையும் சோதித்து பாா்த்தபோது, அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
சேதுபதி தனது இரண்டு பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற வழக்கில் சிறைக்குச் சென்று அண்மையில் விடுதலையானதும், குழந்தைகள் சென்ற இடத்துக்கே செல்வதாக உறவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சடலங்களை போலீஸாா் கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வேளங்கண்ணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].