செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

post image

நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்கங்களை வெட்டுவதற்கு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பல்வேறு புகார்களை தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பாரமரிப்புப் பணிகளுக்காக மரங்களை வெட்ட அனுமதிக்கக் கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் காலாதியாகிவிட்டது. இதனால், மரங்களை வெட்டுவதற்கான கோரிக்கை குறித்து மத்திய அரசின் வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் தமிழக அரசு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிவைக்கும் தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளதால் அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்த முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு உயிர்ப்புடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், தமிழக அரசின் தரப்பிலும் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடி... மேலும் பார்க்க